வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (01:16 IST)

வேற வழியில்லை. சந்தானத்தை சரண் அடைந்த பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் கடந்த சில ஆண்டுகளாக வெற்றி படங்கள் கொடுக்க திணறி வருகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படம் படுதோல்வி அடைந்து ராஜேஷின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.



 


இந்த நிலையில் தன்னை திரைத்துறையில் காப்பாற்றும் சக்தி ஒருவருக்கே உண்டு, அவர் தான் சந்தானம் என்பதை புரிந்து கொண்டு அவரிடம் சரண் அடைந்ததாகவும், சந்தானம், அவரது படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை எம்.ராஜேஷ் படங்களில் காமெடியனாக நடித்து வந்த சந்தானம் முதல்முறையாக அவருடைய இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதுகுறித்து ராஜேஷ் கூறியபோது, 'சந்தானத்தின் இப்போதைய இமேஜூக்கு தகுந்தவாறு இந்த படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளேன். என்னிடம் இருந்து அவர் என்ன எதிர்பார்ப்பார் என்பது எனக்கு தெரியும். இதுவரை அவர் என்னுடைய படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். முதல்முறையாக அவர் என் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்' என்று இயக்குனர் ராஜேஷ் கூறியுள்ளார்.

இந்த கலகலப்பான கூட்டணி வெற்றி படத்தை தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்