வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2017 (13:03 IST)

தன்ஷிகாவைப் பரிந்துரைத்த சமுத்திரக்கனி

என்னுடைய படத்தில் நடிக்க, தன்ஷிகாவை சமுத்திரக்கனிதான் பரிந்துரைத்தார்” எனக் கூறியுள்ளார் ‘ராணி’ படத்தின் இயக்குநரான பானி.

 

 

மலேசியாவில் 40க்கும் மேற்பட்ட டெலிஃபிலிம்களையும், ஒருசில சீரியல்களையும் இயக்கியவர் பானி. ‘நாடோடிகள்’ படத்தில் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர், ‘ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தில், தன்ஷிகா நடித்துள்ளார். அம்மா – மகள் இடையேயான பாசம்தான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தில் நடிக்க பலரிடம் கதை சொல்லியிருக்கிறார் பானி. ஆனால், யாருமே முன்வரவில்லையாம். காரணம், இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டுமென்றால் யார் முன்வருவார்?

கடைசியில், சமுத்திரக்கனி தான் தன்ஷிகாவைப் பரிந்துரை செய்துள்ளார். கதையைக் கேட்ட தன்ஷிகா, மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அடுத்த மாதம் 5ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. சமுத்திரக்கனி நடித்து, இயக்கியுள்ள ‘தொண்டன்’ படமும் 5ஆம் தேதி தான் ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.