1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 11 மார்ச் 2018 (14:23 IST)

விடை பெற்றுக் கொள்கிறேன்: சமந்தா டுவீட்டால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கத்தில் சமந்தா சீமராஜா என்ற படத்தில் நடித்து வந்தார்.

இந்த படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதனையடுத்து அவர் தனது டுவிட்டரில் '24ஏஎம் ஸ்டுடியோவின் தயாரிப்பான 'சீமராஜா' படக்குழுவினர்களிடம் இருந்து விடைபெற்று கொள்கிறேன். சீமராஜா படப்பிடிப்பு குழுவினர்க்கு என் நன்றி. பெஸ்ட் டீமாக ஆக்கிய சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராமுக்கும் நன்றி’ என சமந்தா பதிவு செய்துள்ளார்.

சமந்தாவின் பதிவிற்கு 24ஏம் ஸ்டுடியோஸ் டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறப்பட்டுள்ளது. இந்த டுவிட்டால் நெகிழ்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் இந்த படம் வெற்றியடை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.