வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 10 ஜனவரி 2019 (20:02 IST)

நஷ்டப்பட்ட தயாரிப்பாளருக்கு தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்த சாய் பல்லவி!!

தான் நடித்த படம் தோல்வியை தழுவி  தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தன்னுடைய சம்பளப் பணத்தின் பாதியை நடிகை சாய் பல்லவி விட்டுக் கொடுத்து தயாரிப்பாளருக்கு உதவி செய்ததாக  செய்தி வெளியாகியுள்ளது.




 
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் டிசம்பர் 21ம் தேதி வெளியான படம் மாரி 2 இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பும் அவரின் நடனமும்  ரசிகர்களை கவர்ந்தது. இதில் குறிப்பாக ரவுடி பேசி பாடல் ரசிகர்களை நெருப்பாக பற்றிக்கொண்டது. அவரின் நடனத்திற்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்தது. 
 
அண்மையில் தமிழில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இதில் குறிப்பாக ரவுடி பேசி பாடல் ரசிகர்களை நெருப்பாக பற்றிக்கொண்டது. அவரின் நடனத்திற்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்தது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் ,  சாய் பல்லவி,தெலுங்கில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்த ‘படி படி லெச்சி மனசு’ படம் கடந்த டிசம்பரில் வெளியானது. இப்படம் ரூ 22 கோடிக்கு வியாபாரமானது. ஆனால் படம் ரூ 8 கோடி மட்டும் தான் வசூல் செய்ததாம்.