வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2016 (18:25 IST)

சினிமாவுக்காக பாக்ஸிங்கை தியாகம் செய்த ரித்திகா!!

சினிமாவுக்காக எதை எதையோ இழந்தவர்கள் ஏராளம். அந்த வரிசையில் ரித்திகா சிங் பாக்ஸிங்கை சினிமாவுக்காக கைவிட்டுள்ளார். 

 
அடிப்படையில் பாக்ஸரான ரித்திகா தன்னுடைய மதி கேரக்டருக்கு பொருந்துவார் என்று தான் ரித்திகா சிங் இறுதிசுற்று படத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
 
ஆண்டவன் கட்டளை படத்திலும் ரித்திகாவுக்கு நல்ல பெயர் கிடைக்க தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றனர்.
 
எனவே இனி பாக்ஸிங் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் ரித்திகா. அடுத்து விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்கிறார்.
 
பாக்ஸிங்கில் பங்கேற்றால் நான்கு சுற்றுகள் வரை விளையாட வேண்டும். அப்போது முகத்தில் காயப்பட்டால் அது படங்களை பாதிக்கும். எனவே இனி பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை. வீட்டிலேயே பிராக்டீஸ் மட்டும் பண்ணப்போகிறேன் என்று கூறியிருக்கிறார் ரித்திகா சிங்.