1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 26 ஜூன் 2017 (17:18 IST)

ரூ.9 கோடி கொடுத்து ஹீரோயினை புக் செய்த ராம்சரண்??

சிரஞ்சீவி கைதி நம்பர் 150 படத்தில் நடித்து அந்த படம் வெற்றி அடைந்ததால் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சிரஞ்சீவியின் அடுத்த படத்தையும் அவரது மகன் ராம்சரண் தான் தயாரிக்கவுள்ளார்.


 
 
தந்தை சிரஞ்சீவியுடன் வரலாற்றுப் படமான ’உய்யலவட நரசிம்ம ரெட்டி’ படத்தில் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை அணுகி இருக்கிறார் ராம் சரண்.
 
ஐஸ்வர்யா ராய் ரீஎண்ட்ரி ஒட்டுமொத்த திரையுலகையும் அவர் பக்கம் திருப்பியது. இந்நிலையில், எந்திரன் படத்தில் நடிக்க ரூ.6 கோடி சம்பளம் பெற்றார். 
 
தற்போது ’உய்யலவட நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க 9 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். 
 
ராம்சரண் ஐஸ்வர்யாவிற்கு அட்வான்ஸ் தொகையை கொடுத்து படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.