1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 15 ஆகஸ்ட் 2014 (11:40 IST)

என்னுடைய கதாபாத்திரங்களை கதைதான் தீர்மானிக்கும் - ராஜு முருகன்

குக்கூ படத்தின் மூலம் நிறைய பாராட்டுகளையும், அதே அளவு கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தவர் ராஜு முருகன். வெகுஜனங்களை ஈர்க்கக் கூடிய அருமையான கதை சொல்லி.
அந்த ஒரு காரணத்துக்காகவே அவரது அடுத்தப் படம் குறித்து பல்வேறு வதந்திகள். முக்கியமாக தனுஷை ராஜு முருகன் இயக்குகிறார் என்பது. அதனை மறுபடியும் மறுத்துள்ளார் ராஜு முருகன்.
 
எனது அடுத்தப் படத்துக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். கதைதான் படத்தின் கதாபாத்திரங்கள் யார் என்பதை முடிவு செய்யும். அதற்கு முன்னால் இப்போது ஊடகங்களில் வரும் கற்பனைகளும், யூகங்களும் உண்மையில்லை. இதுவரை யாரும் தொடாத கதைகளத்தில் என்னுடைய அடுத்தப் படம் இருக்கும் என்றார்.
 
ராஜு முருகன் குரங்காட்டி நாவலை படமாக்குகிறார் என்றொரு வதந்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.