வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (19:16 IST)

மரண மாஸ் சிரிப்புடன் ரஜினியின் வாட்ஸ் ஆப் ஆடியோ..! -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வியாழனன்று வெளியான  'பேட்ட'  படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகி வருகிறது.



 
ரஜினியின் ஸ்டைலாலும் ,  தனித்துவமான  நடிப்பாலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த பேட்ட படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் , கஸ்தூரி , சௌந்தர்யா ரஜினிகாந்த் , தனுஷ் , தயாநிதி அழகிரி போன்ற பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தற்போது ரஜினியின்  பேட்ட படத்தை பார்த்துவிட்டு திருப்பூர் சுப்பிரமணியன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது , ரொம்ப அருமையான படம் தலைவா, பேட்ட படத்தை ஆடியன்ஸ் ரொம்ப நல்லா ரசிக்கிறார்கள். இந்த பொங்கலுக்கு இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்ததற்காக நன்றி என்று திருப்பூர் சுப்பிரமணியன் கூற, அதற்கு ரஜினி , ரொம்ப நன்றி சுப்பிரமணியன் , நீங்க சொன்னா மொத்த சினிமா இண்டஸ்ட்ரியும்  சொன்ன மாதிரி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க சொல்லி கேட்பதற்கு நன்றி என கூறி அந்த ஆடியோவை முடித்திருந்தார் ரஜினி. 
 
பேட்ட ரசிகர்கள் மனதை கவர்ந்ததோடு தொழில் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்ததே இதற்கு காரணம்.