வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (15:50 IST)

வேண்டாம் என பலர் கூறியும் ரஜினி செய்யச் சொன்னார்: ரம்யா கிருஷ்ணன்!!

சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு பாகுபலி படத்துக்குப் பிறகு சினிமாவில் தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. 


 
 
இதுபற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் நடிக்கும் வரை என்னை யாரும் சொந்த குரலில் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் நான் தான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று ரஜினிசாரும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சாரும் சொன்னார்கள். 
 
என் குரல் வேண்டாம் என்று பலர் சொன்னாலும், அவர்கள் இரண்டு பேர் தான் நான் பேச வேண்டும் என்றார்கள். அதேபோல் பாகுபலி நான் சொந்தக்குரலில் தான் பேச வேண்டும் என்று ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் சார் கூறினார்.