வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (10:10 IST)

கொலை மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் - நடிகையின் தில்

தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு வரும் 29 -ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதுவரை சங்கத்தின் தலைவராக இருந்த முரளிமோகன் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டதால் அவர் இந்தமுறை தேர்தலில் நிற்கவில்லை. ஆனால், தனது ஆதரவை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகை ஜெயசுதாவுக்கு அளித்துள்ளார். 
 

 
ஜெயசுதாவை எதிர்த்து களம் காணும் நடிகர் ராஜேந்திரபிரசாத்துக்கு சிரஞ்சீவியின் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
"ராஜேந்திரபிரசாத், முரளிமோகன் போன்றவர்கள் வயதில் என்னைவிட மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால், சினிமாவில் நான்தான் சீனியர். அவர்களுக்கெல்லாம் முன்பு சினிமாவுக்கு வந்து, தெலுங்கு நடிகர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அதில் உறுப்பினராக இருக்கிறேன். துணைத்தலைவராகவும் இருந்துள்ளேன்" என விளாசுகிறார் ஜெயசுதா.
 
43 வருடங்களாக சினிமாவில் இருக்கும் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 
 
ஜெயசுதாவின் பேச்சைப் பார்த்தால், பேசியே தோற்றுவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.