வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 20 மே 2015 (13:07 IST)

பாடல்கள் இல்லாமல் தயாராகும் பாகுபலி சர்வதேச பதிப்பு

இந்தியாவுக்கு வெளியிலும் அறியப்படும் கலைஞனாக வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் உள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலிக்கும் தனது பிரமாண்ட படைப்பான பாகுபலி இந்தியாவைத் தாண்டி உலக அளவில் சென்றடைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.

 
இந்தியப் படங்கள் சர்வதேச எல்லையில் முடக்கப்பட முதல் காரணமாக இருப்பது அவற்றின் அபத்தப் பாடல்கள். பாடல்களை களைந்தால் சுமாரான படங்களும் பரவாயில்லை என்ற அந்தஸ்தை பெறும்.
 
பாகுபலி படத்தின் அபத்தப் பாடல்களையும், சில காட்சிகளையும் கத்தரித்து, சர்வதேச திரையிடலுக்கென்றே ஒரு வெர்ஷனை ராஜமௌலி உருவாக்கி வருகிறாராம். 
 
இந்தப் படத்தின் பட்ஜெட் இப்போதே 200 கோடியை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.