1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (15:33 IST)

ரம்யா கிருஷ்ணனிடம் பொது மேடையில் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி!!

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா இயக்குனர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள எஸ்.எஸ்.ராஜமௌலி பொது மேடை ஒன்றில் நடிகை ரம்யாகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


 
 
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பாகுபலி 2 தமிழ் இசை வெளியீட்டு விழாவில் இந்த சம்பவம் அரங்கேறியது. பாகுபலி திரைப்படத்தில் மிக அழுத்தமான கதாப்பாத்திரம் ரம்யாகிருஷ்ணனின் கதாப்பாத்திரம்.
 
இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேறு ஒரு நடிகையை அணுகியதை எண்ணி வெட்கப்படுவதாகவும், அதற்காக ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக​வும் தெரிவித்தார் இயக்குனர் ராஜமௌலி. 
 
முன்னதாக இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க லக்ஷ்மி மஞ்சுவை அணுகியதாகவும் ஆனால் அவர் வயதை காரணம் காட்டி பிரபாஸ், ராணாவுக்கு திரையில் அம்மாவாக நடிக்க விருப்பமில்லை என கூறி வாய்ப்பினை மறுத்துவிட்டதாகவும் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.