1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (14:33 IST)

பொன்னம்பலத்திற்கு இப்படி ஒரு தண்டனையா? - பிக்பாஸ் அப்டேட்

சர்வாதியாக இருந்த ஐஸ்வர்யாவுக்கு எதிராக நடந்து கொண்டதால் நடிகர் பொன்னம்பலத்திற்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

 
பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தாவுக்கு சர்வாதிகாரமாக செயல்படும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. எனவே, அவர் வீட்டில் இருப்பவர்களிடம் தாறுமாறாக நடந்து கொண்டார். அவரை எதிர்த்து பேசிய செண்ட்ராயன் உட்பட பலர் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். இதனால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் ஐஸ்வர்யா மீது கடுமையான கோபம் அடைந்தனர். அவரை திட்டி சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
 
இந்நிலையில், நேற்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு கட்டத்தில் மக்கள் புரட்சி வெடிக்க, சிறையிலிருந்து அனைவரையும் விடுவிக்கும் பொருட்டு ஐஸ்வர்யாவை பொன்னம்பலம் இறுகி பிடித்து கொள்ள அனைவரும் வெளியே ஓடி சென்றனர். மேலும், ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்திலும் பொன்னம்பலம் தள்ளி விட்டார். இந்த சம்பவத்தை அடுத்து ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. எனவே, பிக்பாஸ் முன்பு அவர் கதறி அழுதார்.
 
இந்நிலையில், இன்று வெளியான புரோமோ வீடியோவில் பொன்னம்பலத்திற்கு தண்டனை அளிக்கப்படும் வகையில் அவர் தனிமைப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.