வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (12:48 IST)

மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடக்கும் புலி பாடல்கள் வெளியீடு

புலி படத்தில் இடம்பெறும், ஏண்டி ஏண்டி என்றப் பாடலை சில தினங்கள் முன்பு வெளியிட்டனர். இதுவரை 6 லட்சத்துக்கும் மேலானவர்கள் அதனை ரசித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி புலியின் பிற பாட்களை வெளியிடுகின்றனர்.
மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக புலி பாடல்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. ஆகஸ்ட் 2 -ஆம் தேதி இந்த விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு திரையுலகின் பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
 
கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக இந்த விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.