1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2016 (14:36 IST)

அஜீத் ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்!!

நடிகர் அஜீத்தின் பெருந்தன்மையை பல வருடங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியே கூறியுள்ளார்.

 
பல வருடங்களுக்கு முன் நடிகர் அஜீத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தை பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் வெளி உலகத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
 
அஜீத்தும், நிக் ஆர்ட்ஸ் மூவீஸ் தயாரிப்பாளர் சக்கரவர்த்தியும் நண்பர்கள். நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார் அஜீத். இடையில் சக்கரவர்த்திக்கும், அஜீத்துக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார் அஜீத்.
 
இந்நிலையில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பெரும் கஷ்டத்தில் இருந்த போது, அவரது கஷ்டத்தை அஜீத்திடம் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். அதற்கு அஜீத், திருப்பூர் சுப்பிரமணியத்திடம், ‘’தற்போது நான் வாங்கும் பாதி சம்பளத்திற்கு அவர் படத்தில் நடிக்கிறேன். அதன்பிறகு அவர் தயாரிப்பில் நடிக்க மாட்டேன்’ என்று அஜித் கூறியதாக சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். 
 
சக்கரவர்த்தியும் இதற்கு சம்மதிக்க, அப்படி தயாரான படம்தான் ‘பில்லா’. இந்த விஷயத்தில் அஜீத் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டார் என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.