வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (10:12 IST)

பொன்னியின் செல்வனில் யாருக்கு எந்த கதாபாத்திரம் ?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் யார் எந்த வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது.

இந்த நாவலைப் படமாக்க தமிழ் சினிமா ஆளுமைகளில் பலர் முயன்று தோற்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இதைப் படமாக்க முயன்று  இரண்டு முறைத் தோற்றுள்ளார். தான் பிரபலக் கதாநாயகனாக இருந்த போது ஒருமுறை இந்த படத்திற்கான வேலைகளைத் தொடங்கி போஸ்டர் எல்லாம் கூட வெளியிட்டார். ஆனால் என்ன காரணத்தினாலோ படம் தொடங்கவில்லை, அதன் பின்னர் தான் முதல்வரானப் பின்பு கமல்ஹாசனை கதாநாயகனாக நடிக்க வைத்து தான் ஒருக் குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிக்க முடுவு செய்தார். ஆனால் அந்த எண்ணமும் நிறைவேறவில்லை.

அதையடுத்து இப்போது மணிரத்னம் பொன்னியின் செல்வனைப் படமாக்கும் முயற்சியில் இறங்கி அதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் இறங்கியுள்ளார். இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ஐஸ்வர்யா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இப்போது இவர்களில் யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சுந்தர சோழர்- அமிதாப் பச்சன்
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
வந்தியத் தேவன் – கார்த்தி
அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி
பெரிய பழுவேட்டரையர் – மோகன் பாபு
நந்தினி – ஐஸ்வர்யா ராய்
குந்தவை – கீர்த்தி சுரேஷ்

இன்னும் ஆழ்வார்க்கடியான் நம்பி, பூங்குழலி ஆகிய முக்கியக்கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.