வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 29 அக்டோபர் 2016 (16:32 IST)

திரையரங்குகளில் தயாராகும் திருட்டு டிவிடி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு தலைமையில் சங்க நிர்வாகிகள் மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சுனில் குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது -
 

 
தற்போது ‘கியூப்’ தொழில்நுட்ப முறையில் சினிமா தியேட்டர்களில் திரைப்படங்களில் திரையிடப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப முறையை தவறாக பயன்படுத்தி சினிமா தியேட்டர்களிலேயே திருட்டு டிவிடிகள் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த தொடரி திரைப்படம் கேரள மாநிலத்தில் திரையிடப்பட்டிருந்தது.
 
அங்குள்ள தியேட்டர் ஒன்றில் கியூப் தொழில்நுட்ப முறையில் திருட்டு டி.வி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பதை உரிய விசாரணை நடத்தி தடுக்கவேண்டும். இதற்கு துணைபோகும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
- இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.