1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (13:31 IST)

படங்கள் வெளியிட தடை - பதறி பின்வாங்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்

பாயும் புலியை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்களில் ஒருசாரர் அறிவித்ததும், பாயும் புலி மட்டுமில்லை, எந்தப் படமும் 4 ஆம் தேதி முதல் வெளியாகாது என்று வீம்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது தயாரிப்பாளர்கள் சங்கம். அதுவும் எப்போது? நேற்றுமுன்தினம் மாலை.
 
4 ஆம் தேதி படம் வெளியாகிறது என்று கோடிகளை இறைத்து விளம்பரம் செய்திருந்தவர்கள் இதனால் அதிர்ந்து போயினர். அடுத்தநானே பிரஸ்ஸை அழைத்து, என்னுடைய சவாலே சமாளி அறிவித்தபடி 4 ஆம் தேதி வெளியாகும் என்றார் அருண் பாண்டியன்.
 
அதேபோல் போக்கிரி மன்னன் படத்தின் தயாரிப்பாளரும், 4 ஆம் தேதி படம் வருகிறது என்று ஒரு கோடி செலவளித்து விளம்பரம் செய்திருக்கிறேnம். யார் தடை போட்டாலும் என் படம் வெளியாகும் என்றார்.
 
எல்லாவற்றுக்கும் மேலாக, பாயும் புலி படத்தின் நாயகன் விஷால், கண்டிப்பாக பாயும் புலி 4 ஆம் தேதி வெளியாகும் என்றார். இப்படி மொத்தமாக ஆப்பு வைப்பார்கள் என்பதை அறியாத தயாரிப்பாளர்கள் சங்கம், அவசர அவசரமாக தடையை விலக்கிக் கொண்டதாக அறிவித்தது.
 
ஒருசிலரின் சுயநலத்துக்காக சங்கங்கள் கொடி பிடிப்பதும் தடை அறிவிப்பதும் நல்லதில்லை.