வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : திங்கள், 24 ஜூலை 2017 (12:59 IST)

ஜூலியை எச்சரிக்கும் ஓவியா: நீ வெளிய இறங்குனா உன்ன காறி துப்புவாங்க!

ஜூலியை எச்சரிக்கும் ஓவியா: நீ வெளிய இறங்குனா உன்ன காறி துப்புவாங்க!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா சொல்லாத ஒன்றை சொன்னதாக ஜூலி ஆடிய நாடகத்தை குறும்படம் மூலம் நேற்று முன்தினம் அம்பலப்படுத்தினார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்.


 
 
ஜூலிக்கு வயிற்று வலி வந்து கஷ்டப்பட்ட போது பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் அவர் நடிக்கிறார் என கூறினர். ஆனால் ஓவியா மட்டும் ஜூலிக்கு ஆதரவாக இருந்தார். அப்போது ஜூலி ஓவியாவிடம் எல்லாரும் இப்ப கூட நான் நடிப்பதாக கூறுகின்றனர் என கூறி அழுதார். அப்போது ஓவிய அதை பத்தி எல்லாம் நீ கவலப்படாத என ஆறுதல் கூறினார்.
 
ஆனால் காயத்ரி ரகுராம் வந்த உடன் நான் நடிப்பதாக நீங்க எல்லாம் கூறியதாக ஓவியா என்னிடம் உங்களை பற்றி தவறாக கூறுகிறார் என அப்படியே பிளேட்டை மாற்றி போட்டார் ஜூலி. கூட ஆறுதலுக்கு இருந்தவரையே ஜூலி இப்படி பொய் சொல்லி தவறாக பேசுகிறாரே என பலருக்கும் ஜூலி மீது வெறுப்பு வந்தது.
 
இதனையடுத்து ஜூலியும் காயத்ரி உடன் சேர்ந்து கொண்டு அடுத்தடுத்த நாட்களில் ஓவியாவை சீண்டியும் தனிமைப்படுத்தியும் வந்தனர். வார இறுதியில் கமல் பிக் பாஸ் வீட்டினரை சந்தித்தபோது பல சண்டகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஜூலி கூறிய அந்த பொய் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
 
அப்போது கமல் ஜூலி பொய் கூறி ஓவியாவை பற்றி தவறாக மற்றவர்களிடம் கூறியதை குறும்படம் மூலம் மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு விளக்கி காண்பித்தார். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் தான் ஓவியா மீது எந்த தவறும் இல்லை என மற்ற அனைவரும் புரிந்து கொண்டனர்.
 
ஆனாலும் ஜூலி விடாமல் தனது பொய்யை தொடர நீங்கள் போட்ட வீடியோவின் 5 செக்கண்டுக்கு முன்னாடி ஓவியா அப்படி கூறினார் என தெரிவித்தார். ஆனால் அப்படி எந்த வீடியோவும் எங்களிடம் இல்லை, எங்கள் கேமராக்களும் அப்படி எதுவும் பதிவு செய்யவில்லை என கமல் கூறினார்.

 

 
 
ஆனாலும் ஜூலி தான் மாட்டிக்கொண்டதால் விடாமல் தனது பொய்யில் உறுதியாக இருந்ததால் அவரை கமல் மெண்டல் என பொருள்படும் படி பேசினார். இதனையடுத்து ஜூலி பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் தொடர்ந்து அந்த வீடியோவின் 5 செகண்டுக்கு முன்னாடி ஓவியா என்னிடம் அப்படி கூறினார் என தொடர்ந்து பொய்க்கு மேல் பொய் கூறி வந்தார்.
 
இதனால் ஆத்திரமடைந்த ஓவியா ஜூலியிடம் பெண்கள் அறையில் வைத்த பேச முயற்சித்தார் ஆனால் ஜூலி எழுந்து வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் ஜூலியை முகம் கழுவும் இடத்தில் சந்தித்த ஓவியா. ஜூலி நீ மீண்டும் பொய்க்கு மேல் பொய் சொல்லிட்டு இருக்க. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தால் நீ வெளியே இறங்குனா ஆளுங்க உன்ன காறி துப்புவாங்க என எச்சரித்தார்.