1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2017 (15:53 IST)

விவசாயிகளுக்கு உதவ முன்வந்த ஜீ.வி.பிரகாஷ்

கடந்த 2 மாதங்களில் மட்டும் 31 விவசாயிகள் இறந்துள்ளனர். பயிர்கள் கருகியதில் மனமுடைந்து பலர் இறந்தனர். சிலர்  தற்கொலை செய்து கொண்டனர். இந்த மரணங்களை இயற்கை மரணம் என்று அதிமுகவும், அதிமுக அமைச்சர்கள்  கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

 
இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டை ஆதரித்து, கொம்பு வச்ச சிங்கமாடா என்ற பாடலுக்கு  இசையமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் பாடலை எழுதியுள்ளார்.
 
இந்தப் பாடல் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் கஷ்டப்படும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு தரப்படும் என்று அவர்  அறிவித்துள்ளார்.