வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (09:16 IST)

ஏன் காதல் கண்மணியில் நடித்தேன்? நித்யா மேனன் விளக்கம்

திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழும் கதையமைப்பு உள்ள, ஓ காதல் கண்மணி படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனை நோக்கி விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. 
ஏன் இப்படியொரு சர்ச்சை மிகுந்த வேடத்தை தேர்வு செய்தீர்கள்?
 
இதற்கு நித்யா மேனன் விளக்கம் தந்துள்ளார்.
 
"இயக்குனர் மணிரத்னம் கதை சொன்னபோது காதல், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது என பல விஷயங்கள் இருந்தது. அப்போதே கேரக்டரில் என்னை பொருத்தி பார்த்தேன். நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படம் என்று தோன்றியது. கதையும் மிகவும் பிடித்தது, அதனால் நடித்தேன்" என்றார்.
 
காஞ்சனா 2 படத்தில் சின்ன வேடத்தில் கால் ஊனமான பெண்ணாக நடித்துளன்ளார். அதுபற்றிய கேள்விக்கு பதிலளித்தவர், "சிறு கேரக்டராக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தால் சம்மதிப்பேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க மாட்டேன். சிறிய வேடமாக இருந்தாலும் வலுவானதாக இருந்தால் நடிப்பேன்" என்றார்.