1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (11:22 IST)

இசை என் ரத்தத்தில் ஊறி நிற்கிறது

இசை என் ரத்தத்தில் ஊறியுள்ளது என்று கூறியுள்ளார் நடிகை லட்சுமி மேனன்.
நடிகைகளை பாட வைப்பதை இமான், தேவி ஸ்ரீ பிரசாத் போன்ற இசையமைப்பாளர்கள் ஒரு கொள்கையாக வைத்துள்ளனர். இவர்களால் பாடகியான நடிகைகள் பலர். ஆண்ட்ரியா, ரம்யா நம்பீஸன் என்ற அந்த வரிசையில் கடைசியாக வருகிறவர் லட்சுமி மேனன். கண்ணனின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் லட்சுமி மேனனை ஒரு பாடல் பாட வைத்துள்ளார் இமான்.
 
இசை தெரியாத லட்சுமி மேனனை பாட வைத்திருக்கிறார் என்று சொல்லக் கூடாதே. அதற்காக ஒரு பிட்டை போகிற இடமெல்லாம் போட்டு வைக்கிறார் லட்சுமி மேனன்.
 
அதாவது லட்சுமி மேனனின் பாட்டி ஒரு இசை ஆசிரியராம். சின்ன வயதிலேயே கர்நாடக சங்கீதத்தில் லட்சுமி மேனனுக்கு பாண்டித்யம் உண்டாம். அதனால் இசை என்னுடைய ரத்தத்திலேயே ஊறியுள்ளது, தொடர்ந்து படங்களில் பாடப் போகிறேன் என்று கூறி வருகிறார்.
 
ரத்தத்தில் சர்க்கரை இருக்கா என்று பரிசோதிப்பது போல் இசை எவ்வளவு அவுன்ஸ் உள்ளது என்று பரிசோதிக்க வாய்ப்பில்லை. லட்சுமி மேனன் இது மட்டுமில்லை, இதற்கு மேலும் சொல்வார்.