வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2015 (08:49 IST)

முடிஞ்சா இவன புடி - இது சுதீப் படத்தோட பேரு

புலி படத்தில் வில்லனாக நடித்த சுதீப் இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இருமொழிப் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
 
தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் அவருக்கு இரண்டு வில்லன்கள்.
 
தென்னகத்தின் சிறந்த வில்லன்களில் சுதீப்பும் ஒருவர். அவருக்கே வில்லனாக நடிப்பது என்றால், அவர்கள் வில்லாதி வில்லன்களாகத்தான் இருக்க வேண்டும். 
 
இந்தப் படத்தில் முகேஷ் திவாரி, சரேத் லோஹித்சுவா ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.
 
மேலும், நாசர், சாய் ரவி, அவினாஷ், அச்சுதா குமார்,  இமான் அண்ணாச்சி, பரத் கல்யாண் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
 
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பை பெங்களூருவில் நிறைவு செய்து, தற்போது சென்னையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இதற்காக சென்னை அம்பத்தூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் போன்று பிரமாண்ட அரங்கு அமைத்துள்ளனர்.
 
நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, முடிஞ்சா இவன புடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.