வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (14:18 IST)

வதந்தியில் வறுபடும் சண்டக்கோழி

கார்த்தியை வைத்து இயக்குவதாக இருந்த, எண்ணி ஏழேநாள் தள்ளிப் போனதால் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்துகிறார் லிங்குசாமி. விஷாலும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க கால்ஷீட் தந்துள்ளார். 
சண்டக்கோழியில் மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனை நடிக்க வைக்கயிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அக்ஷரா அதனை மறுத்துள்ளார்.
 
சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடிக்கக் கேட்டு என்னை யாரும் அணுகவில்லை என அவர் கூறியுள்ளார். முதல் செய்தி புஸ்சான நிலையில் இரண்டாவதாக ஒன்றை கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். சண்டக்கோழியில் நடித்த மீரா ஜாஸ்மின் இரண்டாவது பாகத்தில் சின்ன வேடம் ஒன்றில் நடிக்கிறார் என்பதுதான் அது.
 
திருமணமாகி கணவன் குடும்பம் என்று செட்டிலான மீரா ஜாஸ்மின் மலையாளப் படங்களில்கூட இப்போது நடிப்பதில்லை. அவர் தமிழில், அதுவும் சின்ன வேடத்தில். 
 
கோழியை வதந்தீயில் கருக வைப்பார்கள் போலிருக்கே.