செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (20:29 IST)

மணிரத்னம் படம் ட்ராப்....

மணிரத்னம் படம் ட்ராப்....

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, நானி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

 
மணிரத்னம் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் எடுக்க விரும்பியதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. அப்போதே துல்கர் சல்மானும், கீர்த்தி சுரேஷும் படத்திலிருந்து விலகினர். பிறகு நானி உள்ளே வந்தார். இருந்தும் படம் கைவிடப்பட்டது.
 
அதற்கான காரணத்தை நானி கூறியுள்ளார்.
 
மணிரத்னம் எடுக்கயிருந்த படத்தின் கதையைப் போல் இந்தியில் ஒரு படம் வெளியானதாகவும், அதனாலேயே மணிரத்னம் தனது படத்தை கைவிட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
மூன்று நாயகர்கள் கதையை கைவிட்ட மணிரத்னம் கார்த்தி, சாய்பல்லவி நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.