வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (23:12 IST)

பழங்குடியினரின் வாழ்க்கையை படமாக்கும் ரஞ்சித்

ரஞ்சித்தின் மெட்ராஸ் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து காடுகளில் வாழும் பழங்குடியினரின் கதையை அவர் படமாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அட்டகத்தி மூலம் இயக்குனரானவர் ரஞ்சித். வடசென்னையின் இன்னொரு முகத்தை அட்டகத்தியில் பதிவு செய்தவர், மெட்ராஸில் அடுத்தக்கட்டத்துக்கு பாய்ச்சல் காட்டியுள்ளார். வடசென்னையில் சென்று வாழ்ந்த அனுபவத்தை படம் தருகிறது.
 
இதையடுத்து காடுகளில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கையை மையமாக கொண்ட படத்தை அவர் இயக்க உள்ளார். அதற்கான தயாரிப்பு பணிகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.