மூன்று எழுத்தாளர்களின் கதையில் ஒரு படம்
மூன்று பேர் மூன்று காதல் என்ற பெயரில் மூன்று காதல் கதைகளை இயக்கினார் வஸந்த். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. இந்நிலையில் மீண்டும் அதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சிவரஞ்சனியும் மூன்று பெண்களும் என்ற படத்தை வஸந்த் இயக்கி வருகிறார்.
அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா ஆகிய மூன்று எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளை இணைந்து இந்தப் படத்தை எடுக்கிறார்.
அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை சர்வதச திரைப்பட விழாக்களில் திரையிடும் நோக்கில் வஸந்த் அதனை படமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.