வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (18:31 IST)

கொஞ்சம் சென்னையையும் பாருங்க - வட இந்திய மீடியாவை வாரிய சித்தார்த்

தமிழகம் தண்ணீரில் மிதக்கிறது. தொடர் மழையால் ஏற்பட்ட சேதம் எட்டாயிரம் கோடியை தாண்டும் என்கிறார்கள். மழையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. இதுபற்றியெல்லாம் வட இந்திய ஊடகங்களுக்கு எந்த கவலையும் இல்லை.


 


நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று அமீர் கான் சொன்ன ஒற்றை கருத்தை வைத்து கயிறு திரித்துக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியரின் ஒரு உயிர் போனால் பதறும் இந்த பாகுபாடு மீடியாக்கள், தமிழனின் உயிர் என்றால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. அதனை தனது ட்விட்டர் செய்தியில் கண்டித்துள்ளார் சித்தார்த்.
 
அமீர் கான் பிரச்சனையை மட்டும் பார்க்காதீங்க. சென்னை தண்ணியில் மிதக்கிறது. எங்களையும் கொஞ்சம் பாருங்க என குறிப்பிட்டுள்ளார்.
 
சித்தார்த்தின் குண்டூசி குத்தல்கள் ஊடுருவ முடியாத அளவுக்கு தடித்த தோலை கொண்டவை வட இந்திய மீடியாக்கள். கடப்பாரை கொண்டு குத்தினாலும் குறட்டைச் சத்தம்தான் வரும் அவர்களிடமிருந்து.