வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (15:14 IST)

லிப் டூ லிப் கூட தற்போது பெரிய விஷயமே இல்லை; சொல்வது யார் தெரியுமா?

சுசி கணேசன் இயக்கத்தில் அமலா பால், பிரசன்னா, பாபி சிம்ஹா உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்துள்ள படம் திருட்டுப் பயலே 2. இப்படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது.
படம் குறித்து இயக்குநர் சுசி கணேசன் பேட்டி ஒன்றில், இந்த படத்தில் அனைவரும் பொய் சொல்வார்கள். நம்மில் யாரும் சுத்தமில்லை. நல்லவர்கள் பற்றி படம் எடுப்பது போரான விஷயம். அதனால்தான் திருட்டுப் பயலே தலைப்பை அப்படியே  வைத்துக் கொண்டேன். திருட்டுப் பயல் என்ற வார்த்தை படத்தின் ஹீரோவை மட்டும் குறிக்கவில்லை. படத்தில் உள்ள  அனைவரையும்தான்.
 
நல்ல ஒரு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது எளிது அல்ல. முதல் படம் போன்று இரண்டாம் பாகத்தை ஹிட்டாக்க வேண்டும். முதல் படம் ஹிட்டானது ஏன் என்று இயக்குனருக்கு தெரியும் என நினைக்கிறார்கள். ஒரு படம் ஏன் ஹிட் ஆவதும்,  ஆகாததும் யாருக்கும் தெரியாது. முதல் பாகத்தில் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தான் கைகொடுத்தன. ஆனால் சமூக  வலைதளங்கள் வந்த பிறகு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைப்பது கடினம். முதல் பாகத்தில் முத்தக் காட்சிகள் கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது லிப் டூ லிப் கூட தற்போது பெரிய விஷயம் இல்லாமல் ஆகிவிட்டது.  இவ்வாறு இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.