1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 1 அக்டோபர் 2014 (11:25 IST)

என்னுயிர் தோழிகளான லட்சுமி மேனன், சஞ்சிதா ஷெட்டி

இரண்டு நடிகைகள் தோழிகளாக இருப்பது அபூர்வம். அதிலும் முன்னணி நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். பொறாமையும் பற்கடிப்பும் நிச்சயம் இருக்கும்.
 
அபூர்வமாக இணைபிரியா தோழிகளாக இவர்கள் மாறுவதுண்டு. ஒரு காலத்தில் நீயா நானாவாக இருந்த நயன்தாராவும், த்ரிஷாவும் பார்ட்டி ஒன்றில் சந்தித்து பேசிய பிறகு நீயின்றி நானில்லையாக மாறியது சமீபத்திய உதாரணம். 
 
நடிகைகள் பகைத்துக் கொள்ளும் பார்ட்டிகளும், விழாக்களும்தான் அவர்களின் சண்டையை சமாதானப்படுத்தும் இடங்களாகவும் உள்ளன.
சமீபத்தில் நடந்த விருது விழாவில் சஞ்சிதா ஷெட்டிக்கும், லட்சுமி மேனனுக்கும் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தயக்கத்துடன் லட்சுமி மேனனிடம் பேச்சை தொடங்கியிருக்கிறார் சஞ்சிதா. எதிர்புறமிருந்து ம்.. இல்லை... என்றுதான் பதில்வரும் என்று நினைத்துள்ளார். மாறாக லட்சுமி மேனன் அருவியாக பேச்சை கொட்டியுள்ளார். 
 
திக்குமுக்காடிப் போன சஞ்சிதா லட்சுமி மேனனுடனான தனது பேச்சையும் நட்பையும் நாள்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் லட்சுமிமேனனை தனது பெஸ்ட் ஃப்ரெண்ட் என்று போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். வாழ்க என்னுயிர் தோழிகள்.