நாட் ரீச்சபிளில் சென்ற கீர்த்தி சுரேஷ்!!
நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகிவிட்டார்.
தற்போது சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவருகிறார். மேலும் கைவசம் சில படங்களிலும் கமிட்டாகி உள்ளார்.
சில நாட்களாக கீர்த்தி சுரேஷின் மொபைல் நாட் ரீச்சபிளில் உள்ளதாம். இதனால் அவரை புக் செய்திருந்த பட தயாரிப்பாளர்கள் பதற்றத்தில் அவரது தாயாருக்கு கால் பண்ண, கீர்த்தி வெக்கேஷன் போய் இருக்கா என்று பதில் கூறினாராம்.
ஆனால், உண்மை என்ன விசாரித்தால் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு என்பதால் பெர்ஃபார்மென்ஸுக்காக பயிற்சி எடுத்துக்கொள்ள கீர்த்தி சென்று விட்டதாக தகவல் வந்துள்ளது.