1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (18:25 IST)

கத்தி என்னோட கதை - திரும்பவும் முதல்லேர்ந்தா...?

கத்தி என்னோட கதை என்று மீஞ்சூர் கோபி கத்தி கூப்பாடு போட்டு, கடைசியில் இது ஆவுற கதையில்லை என்று கேஸையும் வாபஸ் வாங்கி தலைமறைவாகிவிட்டார்.

இணைய விமர்சகர்கள் கத்தியின் காயின் பைட் எங்கிருந்து சுட்டது, சிறையிலிருந்து தப்பிப்பது எந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதையெல்லாம் சிரத்தையாக வீடியோ சகிதம் அம்பலப்படுத்தி அவர்களும் அயர்ச்சியில், மேட்டரை மாத்துடா கைப்புள்ள என்று ஒதுங்கிவிட்டனர். 
 
இப்படி அனைவரும் கத்தி ஹேங் ஓவரிலிருந்து விடுபடுகிற நேரம் ஆந்திராவிலிருந்து வந்திருக்கிறது ஒரு அபயக்குரல். கத்தி என்னோட கதை சார்.
 
என்னது... மறுபடியும் முதல்லேர்ந்தா என்று உங்களைப் போலவே நமக்கும் ஷாக்தான். அதற்காக விட்டுர முடியுமா?
 
நரசிம்மராவ் என்பவர் நண்பன் படத்தில் ஷங்கரிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்தாராம். அப்போது கத்தி கதையை அவர் விஜய்யிடம் கூறினாராம். அப்புறம் பார்க்கலாம் என்றிருக்கிறார் விஜய். நண்பன் படத்தோடு ஆந்திரா பக்கம் ஒதுங்கிய நரசிம்மராவ் அங்குள்ள எழுத்தாளர் சங்கத்தில் கத்தி கதையை பதிவு செய்து வைத்தாராம். கோபி, முருகதாஸ் ஏமாத்திட்டார் என்றால் நரசிம்மராவோ விஜய் என்னை ஏமாத்திட்டார் என்கிறார். விரைவில் விஜய் மீது புகார் தரப்போகிறாராம்.
 
ஒரே கதையை எத்தனை பேருதாம்பா எழுதுவீங்க?