வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 29 ஜூன் 2015 (09:01 IST)

பள்ளிக்கு கழிப்பறை கட்டித் தந்த கார்த்தி

சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி சென்னையிலுள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு தனது செலவில் கழிப்பறை கட்டி தந்துள்ளார்.
 
அப்பா சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்துகிறார். அதன் தாக்கம் இரு பிள்ளைகளிடமும். மூத்த மகன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டுகிறார். இளைய மகன் கார்த்தியும் நற்பணிகளை சத்தமில்லாமல்  செய்து வருகிறார்.
 
அவர் பள்ளிக்கு கழிப்பறை கட்டித்தந்தது யாருக்கும் தெரியாது. பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அவரது வீடு தேடிவந்து நன்றி சொன்ன பிறகே இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.
 
கோவிலைவிட இன்று இந்தியாவுக்கு சுத்தமான கழிப்பறைகளே தேவை. கார்த்திக்கு பாராட்டுகள்.