வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (18:31 IST)

திருமணத்துக்குப் பிறகு.... காஜல் சொல்லும் கலக்கல் தகவல்கள்

திருமணம் என்று ஆரம்பிக்கும் போதே,அதுக்கென்ன இப்போ என்று அணை போடுவது அந்தக் காலம். இப்போதெல்லாம் தொடங்கும் முன்பே விலாவாரியாக பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.


 
 
திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்று ஒரு சின்ன கேள்வியைத்தான் கேட்டார் நிருபர். அதற்கு காஜல் அளித்திருப்பது ஒரு அடேங்கப்பா பதில்.
 
"திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன். காரணம் திருமணம் ஆனதும் நிறைய பொறுப்புகள் வந்து விடும். கணவன் மற்றும் குழந்தைகளை கவனிக்க வேண்டும். கணவர் குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும்.
 
ஒரு குடும்பத்தலைவியாக கூடுதல் கடமைகள் வந்து சேரும். தேவைகளும் மாறும். கணவரை கவனிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும். இப்படி நிறைய பொறுப்புகளை வைத்துக்கொண்டு சினிமாவில் நடிப்பது கஷ்டம். எனவே திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்காது என்றே கருதுகிறேன். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்ய முடியாது. திருமணம் முடிந்தால் சினிமாவை விட்டு தூரமாக சென்று விடுவேன்" என்றார்.
 
ஆக, ஏ.எல்.விஜய்க்கு வந்தப் பிரச்சனை காஜலை திருமணம் செய்யப் போகிறவருக்கு இருக்காது.