வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2017 (16:55 IST)

கிசுகிசுவால் மனமுடைந்து அழுத பிரபல நடிகை

பிரபல நடிகை காஜல் அகர்வால் கிசுகிசுவால் பல நேரங்களில் மனம் நொந்து அழுதுள்ளேன் என்று கூறியுள்ளார்.


 

 
தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:-
 
நான் சினிமாவில் அறிமுகமானபோது ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் போது என்றிருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக 11 வருடங்கள் சினிமா துறையில் இருக்கிறேன். 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
 
எனக்கு எப்போதும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. ஆரம்ப கால சினிமா வாழ்க்கை என்னை அதிகமாக கஷ்டப்படுத்தியது. கிசுகிசுக்களால் மனம் நொந்து பல நேரங்களில் அழுதுள்ளேன் என்றார்.