1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (12:59 IST)

அஜித்தைப் பார்த்து வியந்த கவிஞர்

அஜித்தின் சண்டையை நேரில் பார்த்து வியந்ததாக கவிஞர் கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 


 

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால் ஹீரோயினாகவும், அக்ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் முக்கிய கேரக்டர்களிலும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை, இயக்குனர் சிவாவுடன் இணைந்து எழுதியுள்ளார் கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து. சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘காதலாட’ பாடலை எழுதியவரும் இவர்தான்.

இந்தப் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கும்போது, நேரில் பார்த்த கபிலன் வைரமுத்து, அஜித்தைப் பார்த்து வியந்து போனாராம். “சண்டைக் காட்சியில் ஒவ்வொரு டேக் முடியும்போதும் அஜித் சாரிடம் ஓடிப்போய், ‘சூப்பராக செய்தீர்கள்’ என்று சொல்வேன். அவர் நம்பாமல், ‘உண்மையாகவா?’ என்று கேட்பார். அந்த தருணங்கள் எல்லாம் எப்போதுமே மறக்க முடியாத நினைவுகள். சண்டைக் காட்சிகளின்போது பயம் தரக்கூடிய ஹைஜம்ப்லாம் செய்தார் அஜித். அதற்கு நானே சாட்சி” என்கிறார் கபிலன் வைரமுத்து.