1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 25 மார்ச் 2015 (09:20 IST)

ஒரு காவிய சோகம்

62 -வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுப் பட்டியலைப் பார்த்தவர்களுக்கு சின்ன அதிர்ச்சி. காவியத் தலைவனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த பல விருதுகளை ஹைதர் படம் தட்டிச் சென்றுள்ளது. ஒரு ஆறுதல் விருதுகூடவா காவியத்தலைவனுக்கு கிடைக்கவில்லை?
 

 
விசாரித்தால் விவகாரம் வேறு மாதிரி உள்ளது.
 
காவியத் தலைவனை விருதுப் போட்டிக்கு அனுப்பவேயில்லையாம். ஏன்? சரித்திரம் படைக்கப் போறேன் என்று வசந்தபாலன் எடுத்த காவியத்தலைவன், தயாரிப்பாளர் சசிகாந்தின் 25 கோடிகளை காபந்து பண்ணிவிட்டது. 25 கோடிகளில் சில கோடிகள்தான் திரும்பக் கிடைத்தது. இதில் விருதுக்கு வேறு அனுப்பி இன்னும் சில லட்சங்களை இழக்க வேண்டுமா என்று பாராமுகமாக இருந்துவிட்டாராம் சசிகாந்த்.
 
இரண்டு விருது கிடைத்திருந்தாவது, தரமான படம்தான், அது மக்களுக்குதான் பிடிக்கலை என்று வசந்தபாலன் ஆறுதல்பட்டிருப்பார்.