வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (09:32 IST)

பாலசந்தர் உடல்நிலையில் முன்னேற்றம் - நினைவு திரும்பியதால் குடும்பத்தார் மகிழ்ச்சி

திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக பாலசந்தர் சென்ற வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயோதிகம் மற்றும் ஜுரம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.

பாலசந்தரை சந்தித்த ரஜினியும், அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இரண்டு தினங்கள் கழிந்து நிலைமை மோசமானது. சிறுநீரகக் கோளாறு காரணமாக பாலசந்தரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. நினைவு முழுமையாக திரும்பியதுடன் குடும்பத்தாரை அடையாளம் கண்டு அவர்களுடன் உரையாடவும் செய்தார். பாலசந்தரின் உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.