1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:12 IST)

அடுத்தப் படத்துக்கு ஜோ‌திகா ரெடி

36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த ஜோ‌திகாவுக்கு கதை சொல்ல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள்.


 

 
36 வயதினிலே, மொழி போன்ற கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிப்பது என்று முடிவு செய்திருப்பதால் ஜோ‌திகாவின் இரண்டாவது ஆட்டம் தள்ளிப் போகிறது.
 
இந்நிலையில், கதை கேட்டு ஒரு படத்தில் நடிக்க ஜோ‌திகா சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல். கதை யார் சொன்னது? இயக்குனர், தயாரிப்பாளர் யார்? என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படாமலே உள்ளது.
 
36 வயதினிலே படம் சூர்யாவுக்கு பல கோடிகள் லாபம் சம்பாதித்து தந்தது. அதனால், ஜோ‌திகாவின் இந்த புதிய படத்தையும் அவரது 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கலாம் என தகவல் உலவுகிறது.