1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 20 மே 2015 (10:03 IST)

ஜிகிர்தண்டா இந்தி ரீமேக் - தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்பாராஜ் புகார்

ஜிகிர்தண்டா படம் தயாரிப்பில் இருந்தபோதே அதன் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கும் முட்டிக் கொண்டது. படத்தின் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்தி, படத்தை சரியாக விளம்பரப்படுத்தாமல் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் படத்தில் பங்காற்றிய அனைவரின் உழைப்பையும் அவமதித்தார் கதிரேசன்.
 
ஜிகிர்தண்டாவின் இந்தி ரீமேக் உரிமை சஜித் நடியட்வாலாவுக்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ரீமேக் உரிமை விற்கப்படும்போது கதை எழுதிய இயக்குனருக்கு 40 சதவீத பணம் தரப்பட வேண்டும். கதிரேசன் ரீமேக் உரிமையை சஜித் நடியட்வாலாவுக்கு விற்றதை கார்த்திக் சுப்பாராஜிடம் தெரிவிக்கவில்லை. முறைப்படி அவரது பங்கும் வந்து சேரவில்லை.
 
கதிரேசன் மீது இயக்குனர்கள் சங்கத்தில் கார்த்திக் சுப்பாராஜ் புகார் தெரிவித்துள்ளார். விரைவில் பஞ்சாயத்து நடக்க உள்ளது.