ஜெய் அஞ்சலி படபிடிப்பு தளத்தில் காதல் லூட்டி: கடுப்பில் படக்குழுவினர்!!
நடிகர் ஜெய் மற்றும் நடிலை அஞ்சலி காதலிப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் பேசிக்கொண்டாலும், இந்த செய்தியை இருவரும் கண்டுகொள்ளவில்லை.
மேலும், இரண்டு பேரும் இதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை, உறுதியான தகவலும் அளிக்கவில்லை. இதனால், இந்த காதல் செய்தி இன்னமும் வதந்தியாகவே சுற்றி திரிகிறது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவரும் பலூன் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இவர்களின் நெருக்கம் மேலும் அதிகமாகியுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஜோடிகளால் படக்குழுவும் பெரிய கஷ்டத்தில் உள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் ரொம்பவும் லூட்டி அடிக்கிறார்களாம். இதனால் படப்பிடிப்பும் ரொம்ப தாமதமாகவே நடந்து வருகிறதாம். இது படக்குழுவுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.