வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 2 நவம்பர் 2016 (19:53 IST)

எனது பெயரை வைத்து விளையாடுவது அநாகரிகம்’: கமல்ஹாசன் காட்டம்

நடிகை கவுதமி கமல்ஹாசன் நீண்ட காலம் நட்போடு உறவு பாராட்டி வந்தவர். பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்த அவர்கள், கடந்த ஆண்டு வெளியான பாபநாசம் திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். இந்நிலையில், கமல்ஹாசனை விட்டுப்பிரிவதாக அறிவித்தார்.
 

 
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கமல்ஹாசனுடன் 13 வருட வாழ்க்கைக்கு பிறகு இந்த பிரிவு எனக்கு நெஞ்சை உடைக்கும் சம்பவாக இருக்கிறது. எனக்கும், அவருக்கும் உள்ள வாழ்க்கை எண்ணங்கள் வேறுபடுவதால், இருவரும் அனுசரித்து போக வேண்டும் அல்லது அவரவர்கள் பாதையில் பயணிக்க வேண்டும்.
 
இதை நான் கடந்த இரண்டு வருடங்களாக யோசித்து வந்தேன். பின்னர் இந்த முடிவெடுத்தேன். எல்லாவற்றையும் தாண்டி நான் முதலில் ஒரு தாய், என் குழந்தைக்கு சிறந்த தாயாக இருப்பது எனது கடமை. 
 
நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு இருந்தே கமல்ஹாசனின் தீவிர ரசிகர். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அதுவும் ஆடை வடிமைப்பாளராக அதிக அனுபவம் கிடைத்தது.
 
கடந்த 29 வருடத்தில் அவருடைய அன்பும், அதரவு எனக்கு கிடைத்தது. என் வாழ்க்கை பயணத்தில் அவர் பல வழிகளாக இருந்தார்” என்று உருக்கமாக எழுதி இருந்தார்.
 
இந்நிலையில் கமலின் பெயரில் இந்த முறிவு குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் ”இந்த முடிவின் மூலம் கெளதமிக்கு மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும் என்றால் அது எனக்கும் மகிழ்ச்சிதான். என்னுடைய உணர்ச்சிகள் குறித்து கூறுவது இந்த சூழலில் முக்கியம் அல்ல. என்னை பொறுத்தவரை கெளதமியும் அவரின் மகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
 
கெளதமிக்கும், சுப்புவுக்கும் (கெளதமியின் மகள்) எனது வாழ்த்துக்கள்.அவர்களுக்கு எப்பொழுதெல்லாம் என்னுடைய ஆதரவு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் அங்கு இருப்பேன்.
 
எனக்கு ஸ்ருதி, அக்‌ஷரா, சுப்புலட்சுமி என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டமான அப்பா என என்னை கருதுகிறேன்" என்று கமலின் பெயரில் இன்று அறிக்கை வெளியானது.
 

 
இதனால் திரையுலகம் பரபரப்பானது. தற்போது அந்த அறிக்கையை தான் வெளியிடவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதில், "இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை" என்று தனது பெயரில் அறிக்கை வெளிட்டது குறித்து காட்டமாக தெரிவித்துள்ளார்.