மீண்டும் மேடை ஏறுகிறார் இசைஞானி இளையராஜா!
இசைஞானி இளையராஜா அவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
பிப்ரவரி 27-ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில், விஜய் டிவி இளையராஜாவின் 1000 பட சாதனையை முன்னிட்டு ‘இளையராஜா 1000’ என்ற இசை நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடத்தியது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக இசைஞானி இளையராஜா அவர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்த உள்ளார். சென்னை, நேரு ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 11ம் தேதி நடக்கும் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபல பாடகர்களும் கலந்து கொண்டு பாட உள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட செலவுக்காக வழங்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.