வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (17:00 IST)

தனுஷ் எழுதிய பாடல் - இளையராஜா பாடினார்

இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய அம்மா பாடலை இளையராஜா பாடுகிறார் என்று படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி சொந்தமாக கதை திரைக்கதை அமைத்து வெளியிட்ட படத்தை இளையராஜா, யார்ரா அது சீனு ராமசாமி என்ற ஒற்றை வாக்கியத்தில் சுக்கு நூறாக்கினார்.
 
இடம் பொருள் ஏவல் படத்தில் தனுஷ் எழுதிய பாடலைதான் இளையராஜா பாடுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். பிறகெப்படி சீனு ராமசாமி வைரமுத்துவை உள்ளே இழுத்தார்?
 
அது கவிப்பேரரசுக்கு மட்டுமே தெரிந்த பெரும் ரகசியம்.
 
எப்படியோ இரண்டு பேரும் இந்த விஷயத்தில் மூக்கு உடைப்ட்ட நிலையில் தனுஷ் எழுதிய பாடலை யுவன் இசையில் பாடினார் இளையராஜா. ஆனால் இது இடம் பொருள் ஏவல் படத்துக்காக இல்லை.
 
ஐஸ்வர்யா தனது வை ராஜா வை படத்துக்கு யுவனைதான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். 3 படம் ஓரளவு ரசிகர்களுக்கு தெரிய வந்தது அனிருத்தின் கொலவெறி பாடலால்தான். அப்படியிருக்க தனது இரண்டாவது படத்தில் அனிருத்துக்குப் பதில் யுவனை அவர் ஒப்பந்தம் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
 
இந்தப் படத்தில் தனுஷ் பாடல் எழுதியுள்ளார். அதனை இளையராஜா பாடினால் நன்றாக இருக்கும் என யுவன் அவரை அணுக, இளையராஜாவும் ஒப்புக் கொண்டு பாடலை பாடித் தந்தார்.
 
இடம் பொருள் ஏவல் இந்தளவு பிரச்சனையை தந்ததால் அதில் இளையராஜா பாடுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.