வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:44 IST)

ஆர்.கே.நகர் தொகுதியையும், முதல்வர் பதவியையும் விலை கொடுத்து வாங்கியிருப்பேன். பிரபல நடிகை

சென்னை ஆர்.கே.நகரில் நேற்று இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் ஆட்சியையும் அதிமுக கட்சியையும் அவர் கைப்பற்றிவிடுவார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் தொலைக்காட்சி நடிகை திவ்யா என்பவர் என்னிடம் ஒரு மில்லியன் டாலர் பணம் இருந்தால், ஆர்.கே.நகர் தொகுதியையும், முதல்வர் பதவியையும் விலைக்கு வாங்கியிருப்பேன் என்றும் ஆர்.கே.நகர் தொகுதியையும், முதல்வர் பதவியையும் வாங்குவது ஜெயலலிதா இருக்கும்போது வேண்டுமானால் பெரிதாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது வர்றவங்க, போறவங்க எல்லாம் வாங்கும்போது நான் வாங்கக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

கேப்டன் டிவியில் ‘சமையல் மந்திரம்‘நிகழ்ச்சி மூலம் பிரபலமான இந்த திவ்யா, தற்போது வம்சம், ‘மரகதவீணை’ போன்ற மெகா சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது