1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2015 (18:53 IST)

செல்வராகவனும் நானும் விரைவில் மீண்டும் இணைவோம் - யுவன் சங்கர் ராஜா

செல்வராகவனும், நானும் மீண்டும் ஒரு படத்தில் விரைவில் இணைவோம்’ என்று இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய யுவன் சங்கர் ராஜா, ‘’சகிப்பின்மை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அதுபோன்ற நிலைமை இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. 
 
கடந்த ஆண்டு நான் 14 படங்களுக்கு இசையமைத்தேன். எனவே ஓய்வு தேவைப்பட்டதால் இந்த ஆண்டு படங்களை குறைத்துக் கொண்டேன். தற்போது தருமி, தரமணி படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.
 
இதில் தரமணி ஐ.டி. இளைஞர்களின் காதலை பற்றியது. கர்நாடிக் இசையில் பாடல்கள் இசையமைக்க தயாராக உள்ளேன். இயக்குனர்கள் கையில்தான் அது உள்ளது.
 
டைரக்டர் செல்வராகவனும், நானும் சேர்ந்து பணியாற்ற இருந்த ‘கான்’ படம் நின்று விட்டது. மீண்டும் ஒரு படத்தில் விரைவில் இணைவோம்’’ என்று கூறியுள்ளார்.