வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 21 ஜனவரி 2015 (12:14 IST)

ஐந்து தினங்களில் இந்தியாவில் 100 கோடியை தாண்டிய ஐ

ஷங்கரின் ஐ ஐந்து தினங்களில் இந்தியாவில் 100 கோடியை தாண்டி சாதனைப் படைத்துள்ளது.
 
ஐ படத்தின் வசூல் குறித்து இதுவரை தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடவில்லை. அதேநேரம், படம் ஐந்து தினங்களில் 100 கோடியை தாண்டியதாக படம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஐ ஐந்து தினங்களில் 40 கோடியை வசூலித்துள்ளது. கேரளாவில் 10.7 கோடிகள். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஐ -இன் தெலுங்குப் பதிப்பு 30 கோடிகளை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் சுமாராக பத்து கோடிகள். இந்திப் பதிப்பு சுமார் பத்து கோடிகள்.
 
இந்த உத்தேச கணக்கே 100 கோடிகளை தாண்டுகிறது. வெளிநாடுகளிலும் ஐ சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளது. 100 கோடிகளை தாண்டும் ஷங்கரின் 3 -வது படம் ஐ. விக்ரமுக்கு இது முதல் 100 கோடி படம்.