1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (12:59 IST)

குத்துவதில் சூரி நான்...

குத்துவதில் சூரி நான்...

தன்ஷிகா கடந்து வந்த பாதையை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஜனநாதனின் பேராண்மை, பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் அரவான், இப்போது ரஞ்சித்தின் கபாலி.


 


தன்ஷிகாவுக்கும் இந்த வளர்ச்சி ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்பது, காத்தாடி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தெரிந்தது.
 
காத்தாடி தன்ஷிகா நாயகியாக நடித்துவரும் படங்களில் ஒன்று. இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசியவர், சின்ன வயதிலேயே நடிப்பு மீது பயங்கர ஆசை. அதனால் படிப்பை விட்டேன். ஒவ்வொரு கட்டத்திலும் கஷ்டப்பட்டுதான் இங்கே இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்றார்.
 
பள்ளி சென்று படிப்பது மட்டுமே படிப்பு அல்லவே. நேரம் கிடைக்கையில் தன்ஷிகா கற்றறிந்தவை ஏராளம். சிலம்பம், ஜிம்னாஸ்டிக்வரை கற்றுக் கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் அவர் கற்றுக் கொள்வது சினிமாவுக்குதானாம்.
 
இன்னொரு விஜயசாந்தி தயார்...?