வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2017 (18:17 IST)

ஜெய் உடன் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை! அஞ்சலி மறுப்பு

'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் ஜெய், அஞ்சலி இணைந்து நடித்துள்ள படம் 'பலூன்'. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.


 



இதை நிரூபணம் செய்வது போல் சூர்யா-ஜோதிகாவின் தோசை திருவிழாவில் இருவரும் கலந்து கொண்டனர். அதேபோல் 'பலூன்' படப்பிடிப்பின் இறுதி நாளில் இருவரும் ஒருவரை ஒருவர் மிஸ் செய்வதாக டுவிட்டரில் பதிவு செய்தனர். இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஞ்சலி, 'எனக்கு யாருடனும் காதல் இல்லை. இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை. நான் ஐந்து படங்களில் நடித்து கொண்டு பிசியாக இருக்கின்றேன்\ என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்