1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2017 (12:57 IST)

விவாகரத்து வேண்டாம்; சேர்ந்து வாழ முடிவெடுத்த நடிகர்!

நடிகர் சுதீப் மற்றும் அவரது மனைவி பிரியா ராதாகிருஷ்ணன் பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி  செப்டம்பர் 11, 2015 -ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர்.

 
நடிகர் சுதீப் தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் பிரபலமானவர். இந்தப் படத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக  ‘முடிஞ்சா இவனபுடி’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். புலி’ படங்களின் வில்லனாக நடித்தவர் நடிகர் சுதீப். கன்னட  படஉலகில் முன்னணி நடிகராக உள்ள சுதீப், சில கன்னட படங்களையும் இயக்கி உள்ளார். நடிகர் சுதீப், தன் மனைவி  பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களது திருமணம் 2001ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு சான்வி  என்ற மகள் உள்ளார். 
 
இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து இருவரும் விவாகரத்து  செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து விவாகரத்து கேட்டு கணவன், மனைவி கோர்ட்டில் மனு கொடுத்திருந்தார்.
 
இதுதொடர்பாக கடந்த 9ம் தேதி விசாரணை நடத்த நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் நீதிமன்றத்தில்  ஆஜராகவில்லை. மகளின் எதிர்கால நலன் கருதி இருவரும் மனக்கசப்பை மறந்து மீண்டும் இணைந்து வாழ முடிவு  செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இருவரும் பேசி சமாதானமாவதற்கு நீதிபதியிடம் அவகாசம் கோரியிருந்த நிலையில், அதனை ஏற்ற நீதிபதி வரும் மார்ச் மாதம்  9ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.